செய்திகள்

கோவிலில் பதுங்கி இருந்தார் செங்குன்றம் ரவுடி கைது

Published On 2018-10-13 08:55 GMT   |   Update On 2018-10-13 08:55 GMT
செங்குன்றம் அருகே கோவில் வளாகத்தில் பதுங்கி இருந்த ரவுடியை போலீசார் கைது செய்தனர்.

செங்குன்றம்:

செங்குன்றத்தை அடுத்த பாடியநல்லூர் ஜோதி நகரை சேர்ந்தவர் ராகுல் (வயது 22). இவர் செங்குன்றம் பகுதியில் ரவுடியாக வலம் வந்தார். இவர் மீது கொலை முயற்சி, அடிதடி, கொலை மிரட்டல் உள்பட 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.

தொடர்ந்து பல்வேறு குற்றங்களில் ஈடுபடுவதாக புகார்கள் வந்தன. இந்த நிலையில் நேற்று வழிப்பறியில் ஈடுபட்டார்.

ஜோதிநகரில் கணேசன் என்பவர் மோட்டார் சைக்கிளில் வந்த போது, ரவுடி ராகுல் வழிமறித்து நிறுத்தினார். அவரிடம் இருந்து ரூ. 5 ஆயிரம் ரொக்கம், செல்போன் ஆகியவற்றை பறித்துக் கொண்டார்.

இதையடுத்து செங்குன்றம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் தலைமையில் போலீசார் ரவுடி ராகுலை தேடி வந்தனர். இந்த நிலையில் பாடியநல்லூர் அங்காளஈஸ்வரி கோவில் வளாகத்தில் பதுங்கி இருந்த ரவுடி ராகுலை கைது செய்தனர்.

Tags:    

Similar News