செய்திகள்

ஆனைமலை அருகே ஆற்றில் மூழ்கி தொழிலாளி பலி

Published On 2018-10-11 12:58 GMT   |   Update On 2018-10-11 12:58 GMT
ஆனைமலை அருகே திருமணம் ஆகி 1 வருடத்தில் ஆற்றில் மூழ்கி தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பொள்ளாச்சி:

ஆனைமலை அருகே உள்ள சின்னப்பன் பாளையத்தை சேர்ந்தவர் முருகானந்தம் (24). மில் தொழிலாளி. இவருக்கு திருமணமாகி ஒரு வருடம் ஆகிறது. சம்பவத்தன்று வேலைக்கு சென்ற முருகானந்தம் வீடு திரும்பவில்லை. அவரை பெற்றோர் தேடி வந்தனர். அவர் தனது நண்பர்களுடன் மது அருந்தியதை சிலர் பார்த்தாக கூறினார்கள். 

இந்த நிலையில் சுந்தரபுரியில் உள்ள ஆழியாறில் முருகானந்தம் பிணமாக மிதந்தார். அவரது உடலை ஆனைமலை போலீசார் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அவர் ஆற்றில் மூழ்கி இறந்து இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News