செய்திகள்

நக்கீரன் ஊழியர்கள் 35 பேர் முன்ஜாமீன் மனு- ஐகோர்ட்டில் நாளை விசாரணை

Published On 2018-10-11 13:37 IST   |   Update On 2018-10-11 13:37:00 IST
நக்கீரன் அலுவலகத்தில் பணியாற்றும் 35 ஊழியர்கள், சென்னை ஐகோர்ட்டில் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு நீதிபதி தண்டபாணி முன்பு நாளை விசாரணைக்கு வர உள்ளது. #NakkeeranGopal #HighCourt
சென்னை:

மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக பேராசிரியர் நிர்மலா தேவியை போலீசார் கைது செய்துள்ளனர். இதுதொடர்பான செய்தி நக்கீரன் பத்திரிகையில் வெளியானது. இந்த செய்தியில், தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் குறித்து அவதூறு கருத்து தெரிவிக்கப்பட்டதாக கூறப்பட்டது.

இதையடுத்து கவர்னர் சார்பில் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் நக்கீரன் கோபால் உள்பட பலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டார். ஆனால், அவர் மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை என்று அவரை மாஜிஸ்திரேட்டு விடுவித்தார்.

இந்த நிலையில், இந்த வழக்கில் தங்களை கைது செய்யலாம் என்று கருதி, நக்கீரன் அலுவலகத்தில் பணியாற்றும் 35 ஊழியர்கள், சென்னை ஐகோர்ட்டில் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு நீதிபதி தண்டபாணி முன்பு நாளை விசாரணைக்கு வர உள்ளது. #NakkeeranGopal #HighCourt
Tags:    

Similar News