செய்திகள்

மீன் வாங்க வந்த வாலிபர் கழுத்தை அறுத்த தொழிலாளி- ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை

Published On 2018-10-10 15:11 GMT   |   Update On 2018-10-10 15:11 GMT
நாமக்கல் அருகே மீன் வாங்க வந்த வாலிபரிடம் ஏற்பட்ட தகராறில் தொழிலாளி அவரது கழுத்தை அறுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பரமத்திவேலூர்:

கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் அருகே உள்ள திருகாட்டு துறை பகுதியை சேர்ந்தவர் மணிவாசகம் (வயது 40).

இவர் நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் 4 ரோடு பகுதியில் உள்ள ஒரு மீன் விற்பனை நிலையத்தில் வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில் பரமத்தி வேலூர் தெற்கு தெருவை சேர்ந்த பாரி (35) என்பவர் நேற்று மீன் வாங்க வந்தார். அப்போது பெரிய இலையில் மீனை கட்டி தரும்படி பாரி கூறினார்.

இதில் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றியதும் ஆத்திரம் அடைந்த மணிவாசகம் தன் கையில் வைத்திருந்த மீன் வெட்டும் கத்தியால் பாரியின் கழுத்தை தர தர வென அறுத்தார்.

இதனால் வலியால் அலறி துடித்த அவர் ரத்த வெள்ளத்தில் சாய்ந்தார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து பரமத்திவேலூர் போலீசில் பாரி கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் மணிவாசகத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. #tamilnews
Tags:    

Similar News