செய்திகள்

துணைவேந்தர் நியமனத்தில் ஊழல் என ஆளுநர் கூறுவதில் சூட்சமம் இருக்கிறது - துரைமுருகன்

Published On 2018-10-07 05:56 GMT   |   Update On 2018-10-07 05:56 GMT
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த திமுக துணை தலைவர் துரைமுருகன், துணைவேந்தர் நியமனத்தில் ஊழல் என ஆளுநர் இப்போது கூறியிருப்பதில் ஏதோ சூட்சமம் இருப்பதாக தெரிவித்துள்ளார். #DuraiMurugan
சென்னை:

சென்னையில் உள்ள கோட்டூர்புரத்தில் திமுக திமுக துணை தலைவர் துரைமுருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், இறந்தவர்களின் பெயர்கள் இன்னும் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படவில்லை எனவும், இறந்தவர்களின் பெயர்களில் ஓட்டுப்போட திட்டமிடப்பட்டு இருக்கிறதோ என்ற சந்தேகம் எழுவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், இடைத்தேர்தல் குறித்து பேசிய அவர், வராத மழைக்கு தேர்தலை தள்ளி வைப்பதற்கு பின்னணியில் ஏதோ நடக்கிறது என கூறியுள்ளார்.

முன்னதாக 2 துணை வேந்தர்களை நியமித்தபோது ஊழல் குறித்து பேசாத ஆளுநர், தற்போது திடீரென துணை வேந்தர் நியமனத்தில் ஊழல் நடந்திருப்பதாக கூறுவதில் ஏதோ சூட்சமம் இருப்பதாகவும், விடிவதற்கு முன் சேவல் கூவுவதுபோல், ஏதோ நடக்கவிருக்கிறது என்பதை ஆளுநர் சூட்சமமாக உணர்த்தியிருப்பதாகவும் துரைமுருகன் தெரிவித்துள்ளார். #DuraiMurugan
Tags:    

Similar News