செய்திகள்

அரியலூர் ரெயில் நிலையத்தில் தீ விபத்து

Published On 2018-10-06 16:26 GMT   |   Update On 2018-10-06 16:26 GMT
அரியலூர் ரெயில் நிலையத்தில் துப்புரவு பணிக்கான பொருட்கள் வைப்பதற்கு தனி அறை தீ விபத்து ஏற்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரியலூர்:

அரியலூர் ரெயில் நிலையத்தில் துப்புரவு பணிக்கான பொருட்கள் வைப்பதற்கு தனி அறை உள்ளது. கழிவறையை சுத்தம் செய்வதற்கான ஆசிட், வாளி மற்றும் மாப்பு உள்ளிட்டவைகள் அங்கு வைக்கப்பட்டு இருந்தன. இந்த நிலையில் நேற்று இரவு 10 மணிக்கு ரெயில் நிலையத்தில் துப்புரவு பொருட்கள் வைக்கப்பட்டிருந்த அறையில் திடீரென தீப்பிடித்து எரியத்தொடங்கியது. இதனால், ரெயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் ரெயில் நிலையம் வந்த பயணிகள் கடும் அவதிக்குள்ளானார்கள். தீ விபத்து குறித்து தகவல் அறிந்த அரியலூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து, தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். தீ விபத்து மின்கசிவால் ஏற்பட்டதா? அல்லது அறையில் வைக்கப்பட்டிருந்த ஆசிட் பாட்டில் கவிழ்ந்து அதனால் தீ விபத்து ஏற்பட்டதா? என்பது குறித்து அரியலூர் ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தினர். #tamilnews
Tags:    

Similar News