செய்திகள்

அரியமங்கலத்தில் நாளை மின்தடை

Published On 2018-10-05 12:29 GMT   |   Update On 2018-10-05 12:29 GMT
அரியமங்கலத்தில் நாளை பராமரிப்பு பணி நடைபெறுவதால் மின்தடை ஏற்படும் பகுதிகளை மின்வாரியம் அறிவித்துள்ளது.

திருச்சி:

திருச்சி அம்பிகாபுரம் துணை மின்நிலையத்தில் நாளை (6-ந் தேதி) மாதாந்திர பணிகள் நடைபெற உள்ளதால் இங்கிருந்து மின்சாரம் பெறும் பகுதிகளான அரியமங்கலம், எஸ்.ஐ.டி., பொன்மலை ராணுவ காலனி, அம்பிகாபுரம், ரயில்நகர், நேருஜி நகர், ராஜப்பாநகர், காமராஜ் நகர், மலையப்பநகர், காட்டூர் பாப்பாக்குறிச்சி, கைலாஷ் நகர்,

சக்திநகர், பாலாஜிநகர், மேலகல்கண்டார்கோட்டை, கீழகல்கண்டார்கோட்டை, ஆலத்தூர், வெங்கடேஸ்வரா நகர், எம்.ஜி.ஆர்.நகர், கொட்டபட்டு ஒரு பகுதி, திருநகர், அடைக்கலஅன்னை நகர், நத்த மாடிப் பட்டி, கீழக்குறிச்சி, சங்கிலியாண்டபுரம், செந்தண்ணீர் புரம் ஆகிய இடங்களில் காலை 9.45 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது. இத்தகவலை மன்னார்புரம் செயற்பொறியாளர் சிவலிங்கம் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News