செய்திகள்

அவினாசி அருகே நடத்தை சந்தேகத்தால் தாயை கயிற்றில் இறுக்கி கொலை செய்த மாணவர்

Published On 2018-10-04 13:23 GMT   |   Update On 2018-10-04 13:27 GMT
நடத்தை சந்தேகத்தால் தாயை கயிற்றில் இறுக்கி கொலை செய்த மாணவரை போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர்:

திருப்பூர் மாவட்டம் பெரு மாநல்லூரை சேர்ந்தவர் சண்முகம். இவரது மனைவி அமுதா(வயது37).

கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

இவர்களது மூத்த மகன் பிரதாப்(20) அப்பகுதியில் உள்ள உறவினர் வீட்டில் வசிக்கிறார். இளைய மகன் பிரவீன்(18) தாய் அமுதாவுடன் ஈட்டிவீரம்பாளையத்தில் வசித்து வந்தார். இவர் அரசு கல்லூரியில் பி.பி.ஏ. படித்து வருகிறார்.நேற்று முன்தினம் நள்ளிரவு அமுதா தூக்குபோட்டு தற்கொலை செய்ததாக கூறி பிரவீன் அவரை மீட்டு அப்பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அமுதா இறந்து விட்டதாக கூறி, உடலை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லுமாறு கூறினர்.

ஆனால் பிரவீன் தாயின் உடலை வீட்டுக்கு கொண்டு சென்றுள்ளார். பின்னர் தனது உறவினர்களுக்கு தகவல் கூறி வரவழைத்தார். நேற்று இறுதிச்சடங்கு ஏற்பாடுகள் நடந்தது. அமுதா உடலை மயானத்துக்கு கொண்டு செல்ல ஆம்புலன்சு உதவியை நாடினர். அதன்பேரில் அங்கு சென்ற ஆம்புலன்சு குழுவினர் அமுதாவின் கழுத்தில் கயிற்றால் இறுக்கப்பட்ட அடையாளத்தை பார்த்து விசாரித்தனர். அமுதா தற்கொலை செய்துள்ளதால் போலீசில் புகார் செய்ய வேண்டும் என அவர்கள் கூறினர். இதைத்தொடர்ந்து உறவினர்கள் போலீசில் புகார் செய்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் அமுதாவின் உறவினர்களிடம் விசாரித்தனர்.

சம்பவம் நடந்த போது பிரவீன் மட்டும் வீட்டில் இருந்ததால் அவரிடம் போலீசார் விசாரித்தனர். அமுதா எந்த இடத்தில் தூக்கு போட்டார்? கயிற்றை அறுத்து இறக்கி தனி ஆளாக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றாயா? என போலீசார் கேட்டபோது பிரவீன் முன்னுக்குப்பின் முரணாக பேசினார்.

இதனால் அவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவரை தனியாக அழைத்து அழைத்து சென்று விசாரித்தனர். அப்போது அமுதாவின் கழுத்தை கயிற்றால் நெரித்து கொலை செய்ததையும், கொலையை மறைக்க அமுதா தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடிய தையும் பிரவீன் ஒப்புக் கொண்டார். இதையடுத்து பிரவீனை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

Similar News