செய்திகள்

காஞ்சீபுரத்தில் தடை செய்யப்பட்ட போதைப்பொருள் பறிமுதல்

Published On 2018-10-04 13:03 IST   |   Update On 2018-10-04 13:03:00 IST
காஞ்சீபுரம் பகுதியில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை உணவு பாதுகாப்பு துறையினர் பறிமுதல் செய்தனர். #Kutka
காஞ்சீபுரம்:

காஞ்சீபுரம் பகுதியில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்று மாவட்ட உணவு பாதுகாப்புதுறை அலுவலர் ராமகிருஷ்ணன் தலைமையில் அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.

அப்போது காஞ்சீபுரம் பஸ் நிலையம் அருகே உள்ள பாவாஜி தெருவில் உள்ள ஒருவருக்கு சொந்தமான கடை மற்றும் அதன் அருகே உள்ள குடோனில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ. 75 ஆயிரம் மதிப்பிலான 50 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை உணவு பாதுகாப்பு துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் கடையின் உரிமையாளர் மீது உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். #Kutka
Tags:    

Similar News