செய்திகள்

தூத்துக்குடியில் மினி மாரத்தான் போட்டி

Published On 2018-10-03 16:10 GMT   |   Update On 2018-10-03 16:10 GMT
தூத்துக்குடியில் ஆண், பெண்களுக்கான மினி மாரத்தான் போட்டி நடந்தது. இதில் ஏராளமானோர் பங்கேற்று ஓடினர்.
தூத்துக்குடி:

தூத்துக்குடி காமராஜ் கல்லூரியின் பழைய மாணவர்கள் சங்க ஆண்டு விழா நேற்று நடந்தது. இந்த விழாவை முன்னிட்டு தூத்துக்குடியில் ஆண், பெண்களுக்கான மினி மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது. இந்த போட்டியை உதவி கலெக்டர் (பயிற்சி) அனு தொடங்கி வைத்தார்.

ஆண்களுக்கான போட்டி பீச்ரோடு ரெயில்வே கேட் அருகில் இருந்தும், பெண்களுக்கான போட்டி ரோச் பூங்காவில் இருந்தும் தொடங்கி, காமராஜ் கல்லூரியில் முடிவடைந்தது. இந்த போட்டியில் தமிழ்நாடு முழுவதிலும் இருந்து ஆண்கள், பெண்கள், பள்ளி- கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

ஆண்களுக்கான மினிமாரத்தான் போட்டியில் ஊட்டியை சேர்ந்த நிகில்குமார் முதல் இடத்தையும், திண்டுக்கல்லை சேர்ந்த கற்குவேல் என்ற பிரதீப் 2-வது இடத்தையும், பிரசாத் 3-வது இடத்தையும் பிடித்தனர். பெண்களுக்கான போட்டியில் தூத்துக்குடி மாவட்டம் காட்டுநாயக்கன் பட்டியை சேர்ந்த மாரிசெல்வி முதல் இடத்தையும், முத்துசெல்வி 2-வது இடத்தையும், ராதிகா 3-வது இடத்தையும் பிடித்தனர்.

வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக 2 கிராம் தங்க நாணயமும், 2-வது பரிசாக 1 கிராம் தங்க நாணயமும், 3-வது பரிசாக ½ கிராம் தங்க நாணயமும் மற்றும் ரொக்க பரிசும் வழங்கப்பட்டது. இந்த பரிசுகளை உதவி கலெக்டர் (பயிற்சி) அனு வழங்கினார்.

இந்த போட்டியில் கலந்து கொண்ட 300 ஆண்கள் மற்றும் 110 பெண்கள் அனைவருக்கும் நினைவு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இந்த பரிசளிப்பு விழாவில் காமராஜ் கல்லூரி முதல்வர் நாகராஜன், பழைய மாணவர்கள் சங்க பொறுப்பாளர்கள் ரமேஷ்குமார், செந்தில்நடராஜன், குருசாமி, ராஜ்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 
Tags:    

Similar News