செய்திகள்

ஆம்பூரில் 4 குழந்தைகளின் தந்தை தீக்குளித்து தற்கொலை

Published On 2018-10-01 11:03 GMT   |   Update On 2018-10-01 11:03 GMT
ஆம்பூரில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் 4 குழந்தைகளின் தந்தை தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

ஆம்பூர்:

ஆம்பூர் டவுன் 2-வது தார்வழி பகுதியை சேர்ந்தவர் சண்முகம் மகன் பிரபு (வயது 35) கட்டிட தொழிலாளி. இவரது மனைவி கீதா 4 ஆண் குழந்தைகள் உள்ளனர்.

நேற்று இரவு கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த பிரபு உடலில் மண்எண்ணை ஊற்றி தீக்குளித்தார். உடல் கருகிய அவர் பரிதாபமாக இறந்தார். ஆம்பூர் டவுன் போலீசார் உடலை கைபற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

4 குழந்தைகளின் தந்தை இறந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News