செய்திகள்

காமராஜர் நினைவு நாள்- என்ஆர் தனபாலன் தலைமையில் அமைதி பேரணி

Published On 2018-10-01 10:09 GMT   |   Update On 2018-10-01 10:10 GMT
பெருந்தலைவர் காமராஜரின் 44-வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு என்ஆர் தனபாலன் தலைமையில் நாளை அமைதி பேரணி நடக்கிறது.
சென்னை:

பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் விடுத்துள்ள அறிக்கையில், “பெருந்தலைவர் காமராஜரின் 44-வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு நாளை (செவ்வாய்) கிண்டியில் உள்ள அவரது நினைவிடம் நோக்கி அமைதிப் பேரணி நடக்கிறது.

காமராஜர் மீது பற்று கொண்ட தொண்டர்கள், விசுவாசிகள், காமராஜர் காட்டிய நல்வழியில் வாழும் பொதுமக்கள், சமுதாய சொந்தங்கள் என அனைவரும் எனது தலைமையில் நடைபெறும் இந்த அமைதிப் பேரணியில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளார். #tamilnews
Tags:    

Similar News