செய்திகள்

உடுமலை அருகே விபத்து - 4 பேர் பலி

Published On 2018-10-01 09:28 GMT   |   Update On 2018-10-01 09:28 GMT
உடுமலை அருகே நடந்த விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். #accident

உடுமலை:

கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆர்.கே.நகர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 32). காய்கறி வியாபாரி. இவரது மனைவி கலைவாணி(27). இவர்களது மகள் ஹர்சினி(6). இவர்கள் 3 பேரும் பொள்ளாச்சியில் இருந்து திண்டுக்கல்லுக்கு குலதெய்வ கோவிலுக்கு சாமி கும்பிட இன்று காரில் புறப்பட்டனர்.

காரை பொள்ளாச்சி மரப்பேட்டையை சேர்ந்த மனோஜ்குமார்(30) என்பவர் ஓட்டி சென்றார். மதியம் 12 மணியளவில் கார் மடத்துக்குளம்-உடுமலை ரோட்டில் கிருஷ்ணாபுரம் என்ற பகுதியில் சென்றது. அப்போது மடத்துக்குளத்தில் இருந்து உடுமலை நோக்கி ஒரு வேன் வந்தது.

கண் இமைக்கும் நேரத்தில் காரும், வேனும் நேருக்குநேர் மோதி விபத்தானது. இதில் சம்பவ இடத்திலேயே கிருஷ்ணமூர்த்தி, அவரது மனைவி கலைவாணி, மகள் ஹர்சினி ஆகியோர் பரிதாபமாக இறந்தனர்.

டிரைவர் மனோஜ்குமார் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

விபத்து பற்றி தெரியவந்ததும் மடத்துக்குளம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பலியான 4 பேரின் உடல்களையும் மீட்டு உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்து நடந்த காரை தொடர்ந்து உறவினர்கள் மற்ற 2 கார்களில் வந்தனர். அவர்கள் பலியானவர்களின் உடல்களை பார்த்து கதறி அழுதனர். #accident

Tags:    

Similar News