செய்திகள்

கிருஷ்ணகிரி அருகே கல்லூரி மாணவி கடத்தல்

Published On 2018-09-29 17:14 GMT   |   Update On 2018-09-29 17:14 GMT
கிருஷ்ணகிரி அருகே கல்லூரி மாணவி கடத்தப்பட்டது குறித்து அவரது தந்தை போலீசில் புகார் செய்தார். போலீசார் மாணவியை தேடி வருகிறார்கள்.
கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி மாவட்டம் கல்லாவி அடுத்த மேட்டுசூளகரை கிராமத்தை சேர்ந்தவர் கோபு(45)கூலி தொழிலாளி. இவரது மகள் சாருலதா(17). இவர் ஊத்தங்கரையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்சி., முதலாம் ஆண்டு படித்து வந்தார். 

இந்நிலையில் கடந்த 27ம் தேதி முதல் சாருலதாவை காணவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இந்நிலையில் தனது மகள் சாருலதாவை, பழையபோச்சம்பள்ளியை சேர்ந்த பாதுஷா மகன் முகமதுஅசாருதீன் என்பவர் கடத்தி சென்றிருக்கலாம் என கல்லாவி போலீசில் கோபு புகார் அளித்துள்ளார். இது குறித்து கல்லாவி போலீசார் வழக்குபதிவு செய்து கல்லூரி மாணவியை தேடி வருகிறார்.
Tags:    

Similar News