செய்திகள்

மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.36½ லட்சம் கடனுதவி - கலெக்டர் வழங்கினார்

Published On 2018-09-29 15:57 GMT   |   Update On 2018-09-29 15:57 GMT
மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.36½ லட்சம் கடனுதவிகளை கலெக்டர் கந்தசாமி வழங்கினார்.
திருவண்ணாமலை:

ஜவ்வாதுமலை ஊராட்சி ஒன்றியத்தின் வளர்ச்சிக்கான மாநில சமச்சீர் வளர்ச்சி நிதி திட்டத்தின் கீழ் 2018-19-ம் ஆண்டிற்கான செயல் திட்டம் தயாரிப்பது குறித்து ஜமுனா மரத்தூரில் அனைத்துத்துறை அலுவலர்களுக்கான ஒருங்கிணைப்பு கூட்டம் நடை பெற்றது. கலெக்டர் கந்தசாமி தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, வேளாண்மைத்துறை, பள்ளிக் கல்வித்துறை, கூட்டுறவுத்துறை, வனத்துறை, மகளிர் திட்டம், மாவட்ட குழந்தைகள் பாது காப்பு அலகு, ஆதிதிராவிடர் நலத்துறை, தாட்கோ, மாவட்ட முன்னோடி வங்கி, நபார்டு என பல்வேறு துறைகளின் மூலமாக ஜவ்வாது மலைவாழ் மக்களின் வளர்ச்சிக்கு தேவை யான விரிவான செயல் திட்டங்கள் குறித்து எடுத் துரைக்கப்பட்டது.

மேலும் கலெக்டர், பள்ளிக் கல்வித்துறை, வனத்துறை பள்ளிகள், பழங்குடியினர் நலன் மற்றும் ஆதிதிராவிடர் உண்டு உறைவிடப் பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள் ஆகியவற்றில் மேற்கொள்ளப் பட வேண்டிய அடிப்படை வசதிகள், உட்கட்டமைப்பு வசதிகள் குறித்து விரிவான ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து ஜவ்வாது மலையில் தொழில் வளர்ச்சி கொண்டு வருவதற்கான திட்டங்கள், தேன் பதப்படுத் தும் அலகு, விவசாயத்தின் வளர்ச்சி, மினி விளையாட்டு அரங்கம், அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கான குடியிருப்புகள் ஆகியவை குறித்தும் ஆய்வு செய்தார்.

பின்னர் ஜவ்வாதுமலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 11 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கூட்டுறவுத்துறை மூலமாக ரூ.22 லட்சத்து 39 ஆயிரத்திற்கான கடனுதவியும், மகளிர் திட்டம் மூலமாக 15 குழுக்களுக்கு ரூ.14 லட்சத்து 20 ஆயிரத்திற்கான கடனுதவி யும் கலெக்டர் வழங்கினார்.

இதில் உதவி கலெக்டர் (பயிற்சி) பிரதாப், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் லோகநாயகி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ரேணுகாம்பாள், ஆரணி உதவி கலெக்டர் (பொறுப்பு) உமாமகேஸ்வரி மற்றும் பலர் கலந்து கொண்டனர். 
Tags:    

Similar News