செய்திகள்

108-க்கு போன் செய்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சிறுமி

Published On 2018-09-29 09:44 GMT   |   Update On 2018-09-29 09:44 GMT
திருநின்றவூரை சேர்ந்த 11 வயது சிறுமி 108 ஆம்புலன்சுக்கு போன் செய்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. #Threat

போரூர்:

சென்னை அவசர ஆம்புலன்ஸ் சேவை பிரிவு எண் 108-க்கு செல்போனில் பேசிய மர்ம நபர் ராமாபுரத்தில் குண்டு வைத்துள்ளதாக கூறிவிட்டு தொடர்பை துண்டித்தார்.

இது குறித்து காவல் கட்டுபாட்டு அறைக்கும் ராமாபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியனுக்கும் தகவல் தெரிவித்தனர் இதையடுத்து அழைப்பு வந்த செல்போன் எண்ணை வைத்து சைபர் க்ரைம் போலீசார் ஆய்வு செய்ததில் ஆவடியை அடுத்த திருநின்றவூர் பகுதியில் இருந்து அழைப்பு வந்தது தெரிந்தது.

இதுபற்றி திருநின்றவூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தியதில் போனில் பேசியது கூலி தொழிலாளியான சேகர் என்பவரின் 11 வயது மகள் என்பது தெரிந்தது. மேலும் சிறுமி பேசிய செல்போன் மதுரவாயல் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவருடையது என்பதும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #Threat

Tags:    

Similar News