செய்திகள்

ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 19 காசுகள் அதிகரிப்பு

Published On 2018-09-29 07:58 GMT   |   Update On 2018-09-29 07:59 GMT
ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 19 காசுகள் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் சென்னையில் 86 ரூபாய் 70 காசுகளுக்கு விற்பனையானது. #FuelPrice
சென்னை:

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலையில் நேற்று மாற்றம் ஏற்பட்டது.

இதன் காரணமாக இந்தியாவில் பெட்ரோல்-டீசல் விலையை எண்ணை நிறுவனங்கள் உயர்த்தி உள்ளன.

இன்று (சனிக்கிழமை) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 19 காசுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் சென்னையில் 86 ரூபாய் 70 காசுகளுக்கு விற்பனையானது.

சில பெட்ரோல் நிலையங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் 87 ரூபாயை எட்டி விட்டது. நாளையும் விலை உயர்ந்தால் சென்னையில் உள்ள அனைத்து பெட்ரோல் நிலையங்களிலும் ஒரு லிட்டர் பெட் ரோல் ரூ.87-க்கு வந்து விடும்.

டீசல் விலை இன்று அதிகளவு உயர்த்தப்பட்டுள்ளது. லிட்டருக்கு 22 காசுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதனால் ஒரு லிட்டர் டீசல் இன்று 78 ரூபாய் 91 காசுகளாக உயர்ந்துள்ளது.

மும்பையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 95 ரூபாயை கடந்து உள்ளது. அடுத்த வாரம் கச்சா எண்ணை விலை உயரும் பட்சத்தில் மும்பை சுற்று வட்டார பகுதிகளில் ஒரு லிட்டர் பெட்ரோல் 100 ரூபாயை தொட்டு விடும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. #FuelPrice
Tags:    

Similar News