செய்திகள்

அரியலூரில் தூய்மை இந்தியா விழிப்புணர்வு ஊர்வலம்

Published On 2018-09-28 22:39 IST   |   Update On 2018-09-28 22:39:00 IST
அரியலூர் அருகே சுற்றுலாத்துறையின் சார்பில் தூய்மை இந்தியா விழிப்புணர்வு ஊர்வலத்தை மாவட்ட வருவாய் அதிகாரி தனசேகரன் தொடங்கி வைத்தார்.
அரியலூர்:

அரியலூர் அண்ணா சிலை அருகே சுற்றுலாத்துறையின் சார்பில் நடந்த தூய்மை இந்தியா விழிப்புணர்வு ஊர்வலத்தை அரியலூர் மாவட்ட வருவாய் அதிகாரி தனசேகரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இதில் அரியலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை சேர்ந்த மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு பிளாஸ்டிக் இல்லாத உலகினை உருவாக்குவோம் என்ற உறுதிமொழியினை ஏற்றுக்கொண்டனர், அதனைத்தொடர்ந்து, விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறு அரியலூர் அண்ணா சிலையில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு, அரசு கலை கல்லூரிக்கு சென்று ஊர்வலத்தை முடித்தனர். இதில் அரியலூர் நகராட்சி ஆணையர் ராஜேந்திரன், உதவி சுற்றுலா அலுவலர் கார்த்திக் உள்பட பலர் கலந்து கொண்டனர். 
Tags:    

Similar News