செய்திகள்

பெரவள்ளூரில் நாளை திமுக பொதுக்கூட்டம்

Published On 2018-09-27 09:15 GMT   |   Update On 2018-09-27 09:15 GMT
பெரவள்ளூரில் அ.தி.மு.க. அரசை கண்டித்து தி.மு.க. சார்பில் கண்டனப் பொதுக் கூட்டம் நாளை மாலை 6 மணியளவில் நடைபெறுகிறது. #DMK
சென்னை:

சென்னை கிழக்கு மாவட்டம் கொளத்தூர் மேற்கு, கிழக்குப் பகுதி தி.மு.க. சார்பில் அ.தி.மு.க. அரசை கண்டித்து கண்டனப் பொதுக் கூட்டம் நாளை (வெள்ளி) மாலை 6 மணியளவில் பெரவள்ளூர் சதுக்கத்தில் நடைபெறுகிறது.

கூட்டத்திற்கு மேற்கு பகுதி செயலாளர் ஏ.நாகராஜன் தலைமை தாங்குகிறார்.

கிழக்கு பகுதி செயலாளர் ஐ.சி.எப். வ.முரளிதரன் முன்னிலை வகிக்கிறார். கூட்டத்தில் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி. புதுக்கோட்டை விஜயா, நடிகர் வாசு விக்ரம், மாவட்ட செயலாளர் சேகர்பாபு எம்.எல்.ஏ., எம்.எல்.ஏ.க்கள் ரங்கநாதன், தாயகம் கவி, ரவிசந்திரன், சட்டத்துறை செயலாளர் கிரிராஜன் ஆகியோர் கலந்து கொண்டு பேசுகிறார்கள்.

கூட்டத்தில் தேவஜவகர், சி.மகேஷ்குமார், கே. சந்துரு, அ.கன்னியப்பன், மு.க.டில்லி, எம்.நாகராஜ், வி.வெங்கடேசன், கொளத்தூர் கிழக்கு பகுதி பன்னீர் செல்வம் வட்ட செயலாளர்கள் அதிபதி, பாபு மற்றும் மாவட்ட பகுதி நிர்வாகிகள், அணி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள். #DMK


Tags:    

Similar News