செய்திகள்

திருவாரூர் அருகே இளம்பெண் தீக்குளித்து தற்கொலை

Published On 2018-09-25 11:34 GMT   |   Update On 2018-09-25 11:34 GMT
திருவாரூர் அருகே இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #suicide

திருவாரூர்:

திருவாரூர் தாலுகா காவல் சரகத்திற்குட்பட்ட புலவலம் பகுதியை சேர்ந்தவர் வீரக்குமார். விவசாயி. இவருடைய மனைவி மதிசெல்வி (வயது 31). இவர்களுக்கு திருமணம் முடிந்து 7 வருடங்கள் ஆகிவிட்டன.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாகவே கணவன்-மனைவி இடையே தகராறு இருந்து வந்தது. இதனால் மதிசெல்வி கணவரை பிரிந்து திருவாரூர் அருகே உள்ள விளமல் பகுதியில் தனியாக வசித்து வந்தார். இதனால் மனஉளைச்சலில் இருந்த வந்த அவர் கடந்த 17-ந்தேதி வீட்டில் இருந்த மண்எண்ணெய் உடலில் ஊற்றி தீ வைத்து கொண்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு திருவாரூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் மதிசெல்வி சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து திருவாரூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #suicide

Tags:    

Similar News