செய்திகள்

அரக்கோணம் அருகே பூ வியாபாரிக்கு கத்திக்குத்து

Published On 2018-09-25 16:32 IST   |   Update On 2018-09-25 16:32:00 IST
அரக்கோணம் அருகே பூ வியாபாரியை கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
அரக்கோணம்:

அரக்கோணம் ராஜபாதர் தெருவை சேர்ந்தவர் வேலாயுதம் (வயது 34). பூ வியாபாரி. அதே பகுதியை சேர்ந்தவர்கள் குதிரை சுரேஷ் (32). விக்னேஷ் (30). இவர்கள் 3 பேரும் நேற்று மாலை மது அருந்தியுள்ளனர்.

அப்போது வேலாயுதத்திற்கும் குதிரை சுரேசுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த குதிரை சுரேஷ் மற்றும் விக்னேஷ், வேலாயுதத்தை கத்தியால் குத்தி விட்டு தப்பி சென்றனர்.

ரத்த வெள்ளத்தில் சரிந்த வேலாயுதத்தை மீட்ட பொதுமக்கள் அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

இதுகுறித்து அரக்கோணம் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய 2 பேரை தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News