செய்திகள்

மணல் கடத்தலில் ஈடுபட்ட 2 பேரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவு

Published On 2018-09-25 08:58 GMT   |   Update On 2018-09-25 08:58 GMT
மணல் கடத்தலில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்கப் பட்டனர். #Jail

பெரியபாளையம்:

பெரியபாளையம் அருகே கொசஸ்தலை மற்றும் ஆரணி ஆற்றில் மணல் கடத்தலில் ஈடுபட்ட அரும்பாக்கம் குமார் என்பரை வெங்கல் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். குருவாயல் முருகன் என்பவரை பெரியபாளையம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இருவரையும் குண்டர் சட்டத்தின் கீழ் ஓர் ஆண்டு சிறையில் அடைக்க டி.ஐ.ஜி மற்றும் திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமாருக்கு பரிந்துரை செய்தனர். இதனை பரிசீலனை செய்த கலெக்டர் இரண்டு நபர்களையும் ஓர் ஆண்டு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

Tags:    

Similar News