செய்திகள்

மதுரையில் ரூ.2¼ லட்சம் மோசடி- நிதி நிறுவன அதிபர் மீது வழக்கு

Published On 2018-09-24 11:43 GMT   |   Update On 2018-09-24 11:43 GMT
மதுரையில் ரூ.2¼ லட்சம் மோசடி செய்ததாக நிதி நிறுவன அதிபர் மற்றும் அவரது மகன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மதுரை:

மதுரை வளையங்குளம் தெற்குத்தெருவைச் சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் (வயது 55). இவர் தவிட்டுச் சந்தை தெற்கு வெளிவீதியில் உள்ள நிதி நிறுவனத்தில் ரூ.2¼ லட்சம் முதலீடு செய்தார். இந்த பணத்திற்கு நிதி நிறுவனத்தினர் வட்டி கொடுக்காமல் இழுத்தடித்தனர்.

இதனைத் தொடர்ந்து தான் முதலீடு செய்த பணத்தை திருப்பித்தரும்படி முத்துகிருஷ்ணன் கேட்டுள்ளார். ஆனால் ரூ.70 ஆயிரம் மட்டும் திருப்பிக் கொடுத்த நிதி நிறுவன உரிமையாளர்கள் மீதிப்பணத்தை கொடுப்பதில் கால தாமதம் செய்துள்ளனர்.

இதனால் தான் மோசடி செய்யப்பட்டதாக தெற்குவாசல் போலீசில் முத்துகிருஷ்ணன் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி நிதி நிறுவன அதிபர் ராஜேந்திரன், அவரது மகன் சந்திரபிரபு ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். #tamilnews
Tags:    

Similar News