செய்திகள்
ஆற்காட்டில் ரூ.70 ஆயிரம் குட்கா பறிமுதல் 3 வியாபாரிகள் கைது
ஆற்காட்டில் குட்கா விற்ற 3 வியாபாரிகள் கைது செய்யப்பட்டனர்.#Gutkha #Gutkhaseized
ஆற்காடு:
ஆற்காடு பஜாரில் உள்ள கடைகளில், தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலை மற்றும் போதை பொருட்கள் விற்கப்படுவதாக ஆற்காடு டவுன் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து இன்ஸ்பெக்டர் ஆனந்தன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் சிதம்பரம் மற்றும் போலீசார் நேற்றிரவு பஜாரில் உள்ள கடைகளில் தீவிர சோதனை நடத்தினர்.
மொத்த வியாபாரம் செய்து வரும் 3 மளிகை கடைகளில் இருந்து ரூ.70 ஆயிரம் மதிப்பிலான குட்கா, பான்மசாலா உள்ளிட்ட பலவகை போதை பாக்குகள் பார்சல், பார்சல்களாக சிக்கியது.
அவற்றை பறிமுதல் செய்த போலீசார், இதுதொடர்பாக கடை உரிமையாளர்களான ஆற்காடு எம்பெருமான் தெருவை சேர்ந்த தங்கபாண்டி (64), ராணிப்பேட்டை புளியங்கண்ணு பகுதியை சேர்ந்த செல்வக்குமார் (33) மற்றும் அவருடைய தம்பி ஜெயக்குமார் (31) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். #Gutkha #Gutkhaseized