சித்தோடு அருகே வீட்டில் புகுந்து 5 பவுன் நகை திருட்டு
ஈரோடு:
சித்தோடு அருகே உள்ள நடுப்பாளையம் பாலாஜி நகரை சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன் உமா சங்கர் (வயது 30).
மேல் வீட்டில் உமாசங்கர் தனது குடும்பத்துடனும், கீழ் வீட்டில் அவரது பெற்றோர் வசித்து வந்தனர்.
இந்த நிலையில் உமா சங்கர் மற்றும் அவரது பெற்றோர் என அனைவரும் சேர்ந்து வீட்டை பூட்டி விட்டு காரைக்குடிக்கு சென்று விட்டனர்.
ஊருக்கு சென்று விட்டு நேற்று வீட்டுக்கு திரும்பி வந்தனர். அப்போது மேல் வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
வீட்டின் உள்ளே பீரோவும் திறந்து கிடந்தது. பீரோவின் உள்ளே இருந்த 5 பவுன் நகை மாயமாகி இருந்தது. வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட மர்ம ஆசாமிகள் வீட்டுக்குள் புகுந்து நகைகளை கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிய வந்தது.
இது குறித்து சித்தோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமிகளை தேடி வருகிறார்கள்.