செய்திகள்

வணிகர் சங்கங்களின் பேரமைப்பு 28-ந்தேதி ஆர்ப்பாட்டம்

Published On 2018-09-24 14:40 IST   |   Update On 2018-09-24 14:40:00 IST
அகில இந்திய சம்மேளனம் சார்பாக வணிகர்களை பெரிதும் பாதிக்கின்ற சட்டங்களை மாற்றியமைக்க கோரி வருகிற 28-ந்தேதி இந்தியா முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
சென்னை:

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அகில இந்திய சம்மேளனம் சார்பாக வணிகர்களை பெரிதும் பாதிக்கின்ற சட்டங்களை மாற்றியமைக்க கோரி வருகிற 28-ந்தேதி இந்தியா முழுவதும் கடை அடைப்பு நடத்துவது என அறிவித்துள்ளது.

தமிழகத்தில் பல்வேறு காரணங்களுக்காக இந்த ஆண்டு பலமுறை கடை அடைப்புகள் நடத்தப்பட்டதை கருத்தில் கொண்டும், பொதுமக்களின் நலன் கருதியும் தமிழகத்தில் கடை அடைப்புக்கு மாற்றாக கருப்பு சட்டை அணிந்து கண்டன ஆர்ப்பாட்டத்தை மண்டல அளவில் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. 28-ந்தேதி சென்னையில் வள்ளுவர் கோட்டம் அருகில் காலை 10 மணிக்கு சென்னை-காஞ்சி மண்டலம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதில் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா ஆர்ப்பாட்ட விளக்க உரை ஆற்ற உள்ளார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News