செய்திகள்

வைகை ஆற்றில் மூழ்கி சிறுவன் பரிதாப பலி

Published On 2018-09-22 17:00 GMT   |   Update On 2018-09-22 17:00 GMT
வைகை ஆற்றில் நண்பர்களுடன் குளித்த சிறுவன் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தான்.

மதுரை:

சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட குடிநீர் தேவைக்காக வைகை அணையில் இருந்து கூடுதல் நீர் திறந்து விடப்பட்டது. இதன் காரணமாக கடந்த வாரம் தண்ணீர் இரு கரைகளையும் தொட்டுச் சென்றது.

தண்ணீர் வரத்து வந்ததையடுத்து மதுரை நகரில் இளைஞர்கள், மாணவர்கள் ஆபத்தை உணராமல் ஆற்றில் குளிக்கச் சென்றனர். இதில் நீச்சல் தெரியாமலும், ஆழமான பகுதிக்கு சிக்கியும் இதுவரை 9 பேர் பலியாகி உள்ளனர். ஆனால் போலீசார் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தொடர்ந்து ஆபத்தான முறையில் ஆற்றில் பொதுமக்கள் இறங்குவதும், குளிப்பதும் நடந்து வருகிறது.

மதுரை அவனியாபுரம், வைக்கம் பெரியார் நகரைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மகன் நவீன் (10). மாணவனான இவன் நேற்று நண்பர்களுடன் அண்ணாநகர் பகுதியில் உள்ள வைகை ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தான்.

அப்போது நவீனுக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டது. இதில் தண்ணீரில் மூழ்கிய அவனுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. உடனே அருகில் இருந்தவர்கள் அவனை மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே நவீன் பரிதாபமாக இறந்தான்.

இது குறித்து அண்ணா நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News