செய்திகள்

வடலூரில் ஒர்க் ஷாப் உரிமையாளர் மீது தாக்குதல் - வாலிபர் கைது

Published On 2018-09-21 15:44 IST   |   Update On 2018-09-21 15:44:00 IST
வடலூரில் ஒர்க் ஷாப் உரிமையாளரை தாக்கிய வாலிபரை கைது செய்த போலீசார் மேலும் 2 பேரை தேடி வருகின்றனர்.
வடலூர்:

கடலூர் மாவட்டம் வடலூர் பகுதியை சேர்ந்தவர் சேகர்(56). இவர் அதே பகுதியில் கனரக வாகனங்கள் பழுது பார்க்கும் ஒர்க் ஷாப் நடத்தி வருகிறார்.

இவருக்கும் வடலூர் அருகே உள்ள சேராக் குப்பத்தை சேர்ந்த செல்ல பாண்டியன் (24) என் பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது.

சம்பவத்தன்று செல்லபாண்டியன் அவரது நண்பர்களான நாரயண சாமி, சூரிய மூர்த்தி ஆகிய 2 பேரையும் அழைத்து கொண்டு வடலூரில் உள்ள சேகரின் ஒர்க் ஷாப்பிற்கு சென்றார். அப்போது அங்கிருந்த சேகரை தகாத வார்த்தைகளால் திட்டி செல்ல பாண்டியனும் அவரது நண்பர்களும் தாக்கினர்.

அப்போது ஒர்க் ஷாப்பில் வேலை பார்த்து கொண்டிருந்த வீரசேகர் என்பவர் செல்ல பாண்டியனையும், அவரது நண்பர்களையும் தடுக்க முயன்றார். உடனே அவர்கள் வீர சேகரையும் சரமாரியாக தாக்கி கொலைமிரட்டல் விடுத்தனர்.

இந்த தாக்குதலில் வீரசேகர் காயம் அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக குறிஞ்சிபாடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இது குறித்து வடலூர் போலீசில் சேகர் புகார் செய்தார். அதன் பேரில் செல்லபாண்டியன், நாரயணசாமி, சூரிய மூர்த்தி ஆகிய 3 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். செல்ல பாண்டியனை கைது செய்தனர். மற்ற 2 பேரையும் வலை வீசி தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News