செய்திகள்
ராஜேஷ்

ஒட்டன்சத்திரத்தில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த உடற்கல்வி ஆசிரியர்

Published On 2018-09-20 05:21 GMT   |   Update On 2018-09-20 05:21 GMT
ஒட்டன்சத்திரத்தில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த உடற்கல்வி ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஒட்டன்சத்திரம்:

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள தும்மிச்சம்பட்டியைச் சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 37). இவர் ஒட்டன்சத்திரத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் கடந்த 8 ஆண்டுகளாக உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். மாணவிகளுக்கு உடற்பயிற்சி வகுப்பு எடுக்கும்போது பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்.

இது குறித்து மாணவிகள் பல முறை கூறியும் கேட்காததால் தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்தனர். இதனையடுத்து தலைமை ஆசிரியர் ஸ்டீபன், ஒட்டன்சத்திரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

போலீசார் உடற்கல்வி ஆசிரியர் ராஜேஷ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரிடம் விசாரணை நடத்தச் சென்றனர். போலீசார் தேடி வருவதை அறிந்ததும் அவர் தப்பி ஓடி விட்டார்.

ஆசிரியர் ராஜேசின் மனைவி சந்தியாவும், அதே பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். அவரையும் பள்ளிக்கு வர வேண்டாம் என நிர்வாகம் அறிவித்தது.



Tags:    

Similar News