செய்திகள்

குழந்தை பிறந்த 22 நாட்களில் தூக்குப்போட்டு பெண் தற்கொலை

Published On 2018-09-19 17:50 GMT   |   Update On 2018-09-19 17:50 GMT
குடியாத்தம் அருகே குழந்தை பிறந்த 22 நாட்களில் வீட்டில் உள்ள கழிவறையில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
குடியாத்தம்:

குடியாத்தத்தை அடுத்த மோடிகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் வேலு. இவரது மகள் ஜனனியும் (வயது 22), குடியாத்தத்தை அடுத்த பரதராமி அருகே உள்ள வி.ராமாபுரம் பகுதியை சேர்ந்த தேவராஜ் மகன் சந்துருவும் (25) கடந்த 1½ வருடத்திற்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். இதனை தொடர்ந்து கர்ப்பிணியான ஜனனிக்கு கடந்த 22 நாட்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது. பின்னர் கடந்த வாரம் கைக்குழந்தையுடன் ஜனனி தாய் வீட்டிற்கு வந்தார். நேற்று மதியம் அவர் வீட்டில் உள்ள கழிவறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்த குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.

தகவல் அறிந்த குடியாத்தம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் செங்குட்டுவன் உள்ளிட்ட போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தினர். பின்னர் ஜனனியின் உடலை பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் திருமணம் ஆகி 1½ ஆண்டே ஆவதால் அது தொடர்பாக வேலூர் உதவி கலெக்டர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 
Tags:    

Similar News