செய்திகள்

ஊத்தங்கரை அருகே ஒரு வயது மகனுடன் இளம்பெண் கடத்தல்

Published On 2018-09-19 14:39 GMT   |   Update On 2018-09-19 14:39 GMT
ஒரு வயது மகனுடன் இளம்பெண் கடத்தப்பட்டது குறித்து ஆசிரியர் போலீசில் புகார் தெரிவித்துள்ளார். போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஊத்தங்கரை:

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை சிங்காரப்பேட்டையை அடுத்த மிட்டப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன்(31). ஆசிரியர். இவரும், சந்தியா(23) என்பவரும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். 

இந்நிலையில் இவர்களுக்கு ஒரு வயதில் வைசவிக் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் கடந்த மாதம் 1ம் தேதி சந்தியா, தனது மகனுடன் வீட்டை விட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இந்நிலையில் தருமபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள வேப்பநத்தம் கிராமத்தை சேர்ந்த கண்ணதாசன்(30) என்பவர் கடத்தி சென்றிருக்கலாம். எனவே, அவரிடமிருந்து தனது மனைவி மற்றும் மகனை மீட்டுத் தருமாறு ஆசிரியர் மணிகண்டன் சிங்காரப்பேட்டை போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சின்னசாமி வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 
Tags:    

Similar News