செய்திகள்

ஐகோர்ட்டு பற்றி அவதூறு பேச்சு: எச்.ராஜாவை கண்டித்து கும்பகோணம் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு

Published On 2018-09-18 10:23 GMT   |   Update On 2018-09-18 10:23 GMT
ஐகோர்ட்டு பற்றி விமர்சித்த எச்.ராஜாவை கண்டித்து கும்பகோணத்தில் வக்கீல் சங்க தலைவர் தலைமையில் ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்றது. #HRaja #BJP
கும்பகோணம்:

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் மெய்யபுரத்தில் நடந்த விநாயகர் சிலை ஊர்வலத்தில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் எச்.ராஜா கலந்து கொண்டார். அப்போது போலீசார் , கூட்டம் நடத்த தடை விதித்ததால் எச்.ராஜா ஆவேசமடைந்து காவல்துறை மற்றும் ஐகோர்ட்டை பற்றி கடுமையாக விமர்சித்து பேசினார்.

அவரது ஆவேச பேச்சு இணைய தளங்களில் வீடியோவாக வைரலாக பரவியது. இதற்கு பல அரசியல் கட்சி தலைவர்கள் எச்.ராஜாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் எச்.ராஜா நீதிமன்றம் குறித்து விமர்சித்ததை கண்டித்து தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் இன்று வக்கீல் சங்க தலைவர் சங்கர் தலைமையில் வக்கீல்கள் ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சுமார் 200-க்கும் மேற்பட்ட வக்கீல்கள் ஈடுபட்டதால் கோர்ட்டு பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டது. #HRaja #BJP
Tags:    

Similar News