செய்திகள்
ராமநாதபுரம் அருகே கோஷ்டி மோதல்- 12 பேர் மீது வழக்கு
ராமநாதபுரம் அருகே நடந்த கோஷ்டி மோதல் குறித்து 12 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் அருகே பனைக்குளம் புதுக்குடியிருப்பை சேர்ந்தவர் ராமன் (வயது 21) .இவருக்கும் இதே கிராமத்தை சேர்ந்த தங்கச்சாமி என்பவருக்கும் ஏற்பட்ட தகராறு கோஷ்டி மோதலாக மாறியது.
இதில் ராமன் தரப்பை சேர்ந்த வேலுச்சாமி, லட்சுமணன், சீதாலட்சுமி, ஆகிய 4 பேர் பலத்த காயமடைந்து ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
ராமனின் தாய் சீதா லட்சுமி அணிந்திருந்த 5 பவுன் நகையையும் திருடிச் சென்று விட்டதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
இதுதொடர்பாக புதுக்குடியிருப்பு கிராமத்தை சேர்ந்த தங்கசாமி, முனியசாமி, முத்துக்குமார், பால முருகன், கோவிந்தராஜ், கண்ணன், மலையரசன், சந்திரகுமார், பெரிய கருப்பன் ,செல்வராஜ், முத்து, தங்கவேல் ஆகிய 12 பேர் மீது தேவிபட்டினம் சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜபிரபு வழக்கு பதிவு செய்தார். இதில் மலையரசன்,சந்திரகுமார் ஆகிய 2 பேரும் கைது செய்யப்பட்டனர்.
தலைமறைவான மற்ற 10 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். #tamilnews
ராமநாதபுரம் அருகே பனைக்குளம் புதுக்குடியிருப்பை சேர்ந்தவர் ராமன் (வயது 21) .இவருக்கும் இதே கிராமத்தை சேர்ந்த தங்கச்சாமி என்பவருக்கும் ஏற்பட்ட தகராறு கோஷ்டி மோதலாக மாறியது.
இதில் ராமன் தரப்பை சேர்ந்த வேலுச்சாமி, லட்சுமணன், சீதாலட்சுமி, ஆகிய 4 பேர் பலத்த காயமடைந்து ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
ராமனின் தாய் சீதா லட்சுமி அணிந்திருந்த 5 பவுன் நகையையும் திருடிச் சென்று விட்டதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
இதுதொடர்பாக புதுக்குடியிருப்பு கிராமத்தை சேர்ந்த தங்கசாமி, முனியசாமி, முத்துக்குமார், பால முருகன், கோவிந்தராஜ், கண்ணன், மலையரசன், சந்திரகுமார், பெரிய கருப்பன் ,செல்வராஜ், முத்து, தங்கவேல் ஆகிய 12 பேர் மீது தேவிபட்டினம் சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜபிரபு வழக்கு பதிவு செய்தார். இதில் மலையரசன்,சந்திரகுமார் ஆகிய 2 பேரும் கைது செய்யப்பட்டனர்.
தலைமறைவான மற்ற 10 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். #tamilnews