செய்திகள்

ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் காதலனுடன் நர்சு தஞ்சம்

Published On 2018-09-15 10:58 GMT   |   Update On 2018-09-15 10:58 GMT
பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்த கொண்ட காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.

ஜோலார்பேட்டை:

திருப்பத்தூர் அருகே உள்ள இருளாபட்டு கிராமத்தை சேர்ந்தவர் மரிக்கொழுந்து (வயது 27).சென்னையில் நர்சாக வேலைபார்த்து வருகிறார்.

ஏலகிரியை சேர்ந்தவர் விஜய் ஏ.சி, மெக்கானிக் இருவரும் 5 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இதற்கு பெற்றோர் எதிரிப்பு தெரிவித்தனர்.

இதையடுத்து காதல் ஜோடி வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர். இன்று காலை பாதுகாப்பு கேட்டு ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தனர்.

Tags:    

Similar News