செய்திகள்

நெல்லை மாவட்டத்தில் 67 விவசாயிகளுக்கு 90 சதவீத மானியத்தில் சோலார் மோட்டார்

Published On 2018-09-14 14:47 GMT   |   Update On 2018-09-14 14:47 GMT
நெல்லை மாவட்டத்தில் தமிழக அரசு 67 விவசாயிகளுக்கு 90 சதவீதம் மானியத்தில் சூரிய சக்தியால் இயங்கும் மின் மோட்டாரை வழங்க உள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.
நெல்லை:

தமிழகத்தின் மின்சாரத் தேவையை குறைக்கும் பொருட்டும், சுற்றுப்புறச் சூழலைப்பேனும் வகையிலும் தமிழக அரசு 90 சதவீதம் மானியத்தில் சூரிய சக்தியால் இயங்கும் மின் மோட்டார் விவசாயிகளுக்காக வழங்கப்பட்டு வருகிறது.

இந்த சூரியசக்தி மின் மோட்டார் மூலம் விவசாயம் செய்து விவசாயிகள் தங்கள் பொருளாதார வளர்ச்சியில் மேம்பாடு அடைந்துள்ளனர்.

இத்திட்டம் குறித்து மாவட்ட கலெக்டர் ஷில்பா பிரபாகர் சதீஷ் கூறியதாவது:-

தமிழகத்தின் மின் தேவையில் 20 சதவீதம் விவசாயத்திற்காக செல விடப்பட்டு வருகிறது. இதுவரை 20,62,000 மின் இணைப்புகள் வேளாண்மைக்காக விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும், பல விவசாயிகள் மின் இணைப்பு வேண்டி விண்ணப்பித்து காத்திருப்பு பட்டியலில் உள்ளனர்.

தமிழகத்தின் மின் தேவையை குறைத்திடவும், சுற்றுச்சூழலை பேணி காத்திடவும், சோலார் சக்தியினால் இயங்கும் மோட்டர்களை அமைத்திட விவசாயிகளுக்கு 90 சதவிதம் மான்யம் அரசு வழங்கி வருகிறது. 10 குதிரை திறன் கொண்ட மோட்டார் அமைக்க ஆகும் செலவினம் ரூ.6,89,000-ல் ரூ.5,24,200-ஐ மான்யமாக வழங்கி வருகிறது.

கடந்த 2017ம் ஆண்டில் 35 விவசாயிகளுக்கும், 2018-ம் ஆண்டு இதுவரை 32 விவசாயிகளுக்கும் சோலார் மோட்டார் வழங்கப்பட்டுள்ளது. இதனால் 105 ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயிகள் சாகுபடி செய்து பயனடைந்துள்ளனர். இத்திட்டத்தின் மூலம் தேவைப்படும் விவசாயிகள் வேளாண் பொறியியல் துறையினை அணுகி பயன் பெறலாம்.

வேளாண்மை தொழிலை மேம்படுத்த அரசு எடுக்கும் முயற்சியினை அனைவரும் பின்பற்றி வேளாண்மை செய்து வந்தால் நாளைய தமிழகம் பசுமை செழிப்போடு விளங்கும் என்பதற்கு நெல்லை மாவட்ட விவசாயிகளே முன் உதாரணம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார். #tamilnews
Tags:    

Similar News