செய்திகள்

முன்னாள் ராணுவ வீரர்கள் ஊர்வலம்-ஆர்ப்பாட்டம் இலவசமனை பட்டா வழங்க கோரிக்கை

Published On 2018-09-14 11:48 GMT   |   Update On 2018-09-14 11:48 GMT
இலவசமனை பட்டா உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதுவை மாநில முன்னாள் முப்படையினர் நலச்சங்கத்தினர் இன்று ஊர்வலம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி:

காலியாக உள்ள முப்படை நலத்துறை இயக்குனர் பதவியை நிரப்ப வேண்டும், ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு சென்டாக் மூலம் மருத்துவக் கல்லூரியில் கல்விக்கு வழங்கப்படும் ஒரு சதவீதத்தை 3 சதவீதமாக உயர்த்த வேண்டும், இலவசமனை பட்டா வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதுவை மாநில முன்னாள் முப்படையினர் நலச்சங்கத்தினர் இன்று ஊர்வலம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கடலூர் சாலை மறைமலையடி சாலை சந்திப்பில் இருந்து புறப்பட்ட ஊர்வலத்திற்கு சங்கத் தலைவர் இளஞ்சேரலாதன் தலைமை தாங்கினார் பொதுச் செயலாளர் சாந்துராஜன் முன்னிலை வகித்தார். ஊர்வலத்தில் முன்னாள் ராணுவவீரர்கள் 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

ஊர்வலம் அண்ணாசாலை, நேரு வீதி வழியாக தலைமை தபால் நிலையத்தை அடைந்தது. அங்கு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தின் முடிவில் முதல்-அமைச்சர் நாராயணசாமியை சந்தித்து மனு அளித்தனர். #tamilnews
Tags:    

Similar News