செய்திகள்

மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் ரூ. 3.27 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்- கலெக்டர் வழங்கினார்

Published On 2018-09-12 17:19 GMT   |   Update On 2018-09-12 17:19 GMT
கிருஷ்ணகிரியில் நடந்த மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் ரூ. 3.27 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் பிரபாகர் வழங்கினார்.
கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் வாராந்திர மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் பிரபாகர் தலைமை வகித்தார். கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து குடிநீர் வசதி, மின்சார வசதி, பட்டா, கல்வி உதவித்தொகை, ஓய்வூதியம், இலவச தையல் எந்திரம் போன்ற கோரிக்கை அடங்கிய 187 மனுக்கள் பெற்றுக்கொண்ட கலெக்டர், அந்த மனுக்கள் மீது உரிய துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் உத்தரவிட்டார். 

பின்னர், முதலமைச்சர் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின்கீழ் வேப்பனபள்ளியை சேர்ந்த ஜானகி என்பவருக்கு நவீன செயற்கை கால், மலையாண்டஹள்ளி சேர்ந்த தனபால் என்பருக்கு நவீன செயற்கை கை, சாமனப்பள்ளியை சேர்ந்த மாணவர் சஞ்சய் என்பவருக்கு நவீன செயற்கை ஆகியவை வழங்கப்பட்டது. 

அத்துடன் மாற்றுத் திறனாளிகள் நலவாரியம் சார்பில் இயற்கை மரணம் மற்றும் ஈமசடங்கு நிதியாக வாரிசுதாரர்களுக்கு காசோலைகள் வழங்கப்பட்டது. முன்னாள் படைவீரர் நலத்துறை சார்பில் தொன்னைகான் கொட்டாய் கிராமத்தை சேர்ந்த சுகன்யா என்பவருக்கு விலையில்லா தையல் எந்திரம் என மொத்தம் 13 பயனாளிகளுக்கு ரூ. 3 லட்சத்து 26 ஆயிரத்து 981 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். 

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) சந்தியா, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் மகிழ்நன், முதலமைச்சர் விரிவான மருத்துவ காப்பீட்டு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜேஷ், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலர் சிவசங்கரன், மாவட்ட பிற்பட்டோர் நலத்துறை அலுவலர் அய்யப்பன் மற்றும் பல்வேறு துறையை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News