செய்திகள்

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 8,600 கனஅடியாக சரிவு

Published On 2018-09-11 09:14 GMT   |   Update On 2018-09-11 09:14 GMT
ஒகேனக்கல்லுக்கு நேற்று வினாடிக்கு 9 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து வந்தது. இன்று வினாடிக்கு 8,600 ஆயிரம் கனஅடியாக நீர்வரத்து குறைந்து வந்து கொண்டிருக்கிறது.
ஒகேனக்கல்:

கர்நாடக மாநிலம் காவிரி நீர் பிடிப்பு பகுதியில் பெய்த மழை குறைந்ததால் அங்குள்ள அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் குறைக்கப்பட்டது.

இதனால் கர்நாடகா- தமிழக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு நேற்று வினாடிக்கு 9 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து வந்தது. இன்று வினாடிக்கு 8,600 ஆயிரம் கனஅடியாக நீர்வரத்து குறைந்து வந்து கொண்டிருக்கிறது.

இதனால் சினிபால்ஸ், புலியருவி, ஐந்தருவி, காவிரி ஆற்றில் கரையோரம் ஆகிய பகுதிகளில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்.

மேலும் ஒகேனக்கல்லுக்கு அதிகமாக நீர்வரத்து வந்ததால் மெயின் அருவியில் கம்பிகள் சேதம் அடைந்தது. அந்த பகுதியில் பராமரிப்பு பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

Similar News