செய்திகள்

திருமங்கலத்தில் கிணற்றில் மூழ்கி மாணவன் பலி

Published On 2018-09-10 12:23 GMT   |   Update On 2018-09-10 12:23 GMT
திருமங்கலத்தில் பந்தை எடுக்கச் சென்றபோது மாணவன் தவறி விழுந்து இறந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பேரையூர்:

திருமங்கலம் அருகே உள்ள புளியங்குளம் ஆண்டித்தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் கருப்பசாமி. இவருடைய மகன் கதிர்வேல் (வயது 9). 4-ம் வகுப்பு மாணவன்.

நேற்று கருப்பசாமி தனது மனைவியுடன் திருமங்கலத்தில் நடைபெற்ற ஒரு விசே‌ஷத்திற்கு சென்றார். கதிர்வேல் மட்டும் வீட்டில் தனியாக இருந்தான்.

வீட்டு முன்பு தோட்டத்தில் அவன் பந்து விளையாடி உள்ளான். எதிர்பாராத விதமாக பந்து அங்குள்ள கிணற்றுக்குள் விழுந்தது. அதனை எடுப்பதற்காக கதிர்வேல் இறங்கி உள்ளான்.

அப்போது நிலை தடுமாறி தவறி கிணற்றுக்குள் விழுந்து விட்டான். இதனால் தண்ணீரில் மூழ்கிய கதிர்வேல் பரிதாபமாக இறந்தான். வீடு திரும்பிய கருப்பசாமி மகனை தேடிய போது கிணற்றுக்குள் அவன் பினமாக இருப்பது தெரியவந்தது.

இது குறித்து திருமங்கலம் நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
Tags:    

Similar News