செய்திகள்

முத்தூர் பகுதியில் மதுக்கடை அருகே இறந்து கிடந்த தொழிலாளி

Published On 2018-09-09 16:44 GMT   |   Update On 2018-09-09 16:44 GMT
கொடுமுடி டாஸ்மாக் கடை அருகே தொழிலாளி இறந்து கிடந்தார். அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

முத்தூர்:

திண்டுக்கல் மாவட்டம் நிலாக்கோட்டை அடுத்த விளாம்பட்டியை சேர்ந்தவர் வீரகார்த்திக் (வயது31). இவரது மனைவி பெயர் கலா. வீரகார்த்திக் முத்தூர் அருகே உள்ள வீரசோழ புரத்தில் உள்ள ஒரு அட்டை கம்பெனியில் மிஷின் ஆப்பரேட்டராக பணிபுரிந்து வந்தார்.

சம்பவத்தன்று வீட்டில் வேலைக்கு போய் விட்டு வருவதாகவும் மறுநாள் காலை தாமதமாக வருவேன்..என்று மனைவியிடம் சொல்லி கொண்டு வீரகார்த்திக் வேலைக்கு சென்றார்.

ஆனால் மறுநாள் வெகு நேரம் ஆகியும் அவர் திரும்பி வரவில்லை. இந்த நிலையில் அப்பகுதியில் உள்ள கொடுமுடி ரோட்டில் டாஸ்மாக் மதுக்கடை அருகே வீரகார்த்திக் மயங்கி கிடந்ததை அவருடன் வேலை பார்க்கும் மோகன் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அவரை மீட்டு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் அங்கு பரிசோதித்த டாக்டர் வீரகார்த்திக் ஏற்கனவே இறந்து விட்டார் என்று தெரிவித்தார்.

இந்த சம்பவம் குறித்து வெள்ளகோவில் போலீசார் வழக்குபதிவு செய்து வீரகார்த்திக் எப்படி இறந்தார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News