செய்திகள்

பல்லடம் அருகே விபத்தில் தொழிலாளி பலி

Published On 2018-09-08 11:17 GMT   |   Update On 2018-09-08 11:17 GMT
பல்லடம் அருகே விபத்தில் தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #accident

பல்லடம்:

பல்லடம் மல்லே கவுண்டன்பாளையத்தை சேர்ந்தவர் இடும்பன் (வயது 64). கூலித்தொழிலாளி. இவர் நேற்று அருகில் உள்ள மளிகை கடைக்கு புறப்பட்டார்.

கரடிவாவி- காம நாயக்கன் பாளையம் சாலை பஸ் நிறுத்தம் அருகே நடந்து சென்றபோது அந்த வழியே வந்த மோட்டார் சைக்கிள் இடும்பன் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே படுகாயம் அடைந்து மயங்கினார். அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் ஓடி வந்தனர்.

பொதுமக்கள் வருவதை பார்த்த மேட்டார் சைக்கிள் ஓட்டி வந்த நபர் மோட்டார் சைக்கிளை அங்கேயே போட்டு விட்டு ஓட்டம் பிடித்தார். படுகாயம் அடைந்த இடும்பனை மீட்டு பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு இடும்பனை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இது குறித்து காமநாயக்கன்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்து விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பி ஓடிய நபரை தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News