அமைச்சர் விஜயபாஸ்கர் கைது செய்யப்படுவது உறுதி- புகழேந்தி பேட்டி
குத்தாலம்:
நாகை மாவட்டம் குத்தாலத்திற்கு வந்த அம்மா மக்கள் முன்னேற்றக் கழக செய்தித்தொடர்பாளரும், கர்நாடக மாநில செயலாளருமான புகழேந்தி நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
தமிழிசை சவுந்திரராஜன் செல்லும் விமானத்தில் இனி செல்லப்போவதில்லை. இனிமேல் ரெயிலில் பயணம் செய்யப் போகிறோம். பொதுமக்களும் இதனை கருத்தில் கொள்ள வேண்டும் பதவியில் உள்ள டி.ஜி.பி வீட்டில் சி.பி.ஐ சோதனை நடைபெறுவது இந்தியாவிலேயே முதல்முறை. சி.பி.ஐ. அதிரடி சோதனைக்குப்பின், அமைச்சர் பதவியில் விஜயபாஸ்கர் தொடரக்கூடாது, உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும். இந்த விவகாரத்தில், சிபிஐ சம்மன் அனுப்பும். அமைச்சர் விஜயபாஸ்கர் கைது செய்யப்படுவது உறுதி.
தமிழகம் முழுவதும் மணல்கொள்ளை நடைபெறுகின்றது. இதில் முதலமைச்சர் உள்ளிட்ட அனைத்து அமைச்சர்களுக்கும் தொடர்பு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது மாநில பொருளாளர் ரெங்கசாமி, அ.ம.மு.க அமைப்புச் செயலாளர் குடவாசல் ராஜேந்திரன், நாகை வடக்கு மாவட்ட செயலாளர் செந்தமிழன் ஆகியோர் உடனிருந்தனர். #pugalenthi #ministervijayabaskar #Gutkha