செய்திகள்

அறந்தாங்கியில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை

Published On 2018-09-07 14:34 GMT   |   Update On 2018-09-07 14:34 GMT
அறந்தாங்கியில் குடும்ப தகராறில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
அறந்தாங்கி:

அறந்தாங்கியை அடுத்த கூகனூர்குடியிருப்பைச் சேர்ந்தவர் தங்கவேல். இவரது மனைவி சுமித்ரா(வயது 20). இவர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று 6 மாதத்தில் பெண் குழந்தை உள்ளது.

இந்த  நிலையில் கடந்த மாதம் 15-ந்தேதி தங்கவேலு விற்கும், சுமித்ராவிற்கும் இடையே குடும்பதகராறு ஏற்பட்டதாக    கூறப்படுகிறது. இதில் மனவேதனை அடைந்த சுமித்ரா தன் உடலில் மண்எண்ணெய் ஊற்றிக் கொண்டு தீ வைத்துக் கொண்டார். உடனே அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று அவரை மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் சேர்த்தனர். 

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி சுமித்ரா பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து நாகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News