செய்திகள்

நாகர்கோவிலில் மனைவி இறந்த துக்கத்தில் வாலிபர் தற்கொலை

Published On 2018-09-07 13:19 GMT   |   Update On 2018-09-07 13:19 GMT
மனைவி இறந்த துக்கம் தாங்காமல் பேசாமல் இருந்த வந்த வாலிபர் விஷம் குறித்து தற்கொலை செய்து கொண்டார்.
நாகர்கோவில்:

நாகர்கோவில் மறவன் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் (வயது 42), தொழிலாளி. இவருக்கு திருமணம் முடிந்து 11 வருடங்கள் ஆகிறது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மனைவி இறந்து விட்டார். இதனால் கிருஷ்ணகுமார் யாருடனும் பேசாமல் காணப்பட்டு வந்தார். இதில் மன வருத்தத்துடன் காணப்பட்டு வந்த அவர், சம்பவத்தன்று விஷம் குடித்து ஆபத்தான நிலையில் மயங்கி கிடந்தார். 

இதையடுத்து அவரை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று கிருஷ்ணகுமார் பரிதாபமாக இறந்தார். 

இது குறித்து நேசமணி நகர் போலீசில் புகார் செய்யப் பட்டது. இன்ஸ்பெக்டர் சாய்லெட்சுமி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல் புதுக்கடையை அடுத்த காப்பிக்காடு குன்னத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 48), தொழிலாளி. இவருக்கு திருமணம் முடிந்து குழந்தைகள் இல்லை. இதனால் மனவருத்தத்துடன் காணப்பட்டு வந்தார். இந்த நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து புதுக்கடை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்- இன்ஸ்பெக்டர் சுரேந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரி பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News