செய்திகள்

சிறந்த தலைவரான கருணாநிதியை இழந்து விட்டோம் - கோபாலபுரத்தில் பிரணாப் முகர்ஜி பேட்டி

Published On 2018-09-06 16:11 GMT   |   Update On 2018-09-06 16:11 GMT
கோபாலபுரம் இல்லத்துக்கு இன்று வருகை தந்த முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, கருணாநிதி படத்தின் முன் அஞ்சலி செலுத்தினார். #Karunanidhi #DMK #PranabMukherjee
சென்னை:

முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி சில நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக சென்னைக்கு வந்துள்ளார். இந்நிலையில், இன்று இரவு மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்துக்கு வந்த அவர், கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தினார். 

இதனை அடுத்து, செய்தியாளர்களை சந்தித்த பிரணாப் முகர்ஜி கூறியதாவது, “கருணாநிதி மறைந்த சமயத்தில் வர இயலவில்லை. சிறந்த தலைவரான கருணாநிதியை இழந்து விட்டோம். 48 ஆண்டுகள் நல்ல நண்பராக இருந்தவர் கருணாநிதி. ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களுக்கு ஆறுதல் தெரிவித்தேன்” என தெரிவித்தார்.
Tags:    

Similar News