செய்திகள்

தோட்டத்தில் இறந்து கிடந்த 5 மயில்கள்- வி‌ஷம் வைத்து கொல்லப்பட்டதா?

Published On 2018-09-04 12:20 GMT   |   Update On 2018-09-04 12:20 GMT
தோட்டத்தில் 5 மயில்கள் ஆங்காங்கே மர்மமான முறையில் இறந்து கிடந்தது குறித்து அதற்கு யாராவது விஷம் வைத்தார்களா என்பது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரச்சலூர்:

அரச்சலூர் அருகே உள்ள சில்லாகாட்டுப்புதூரில் சாமிநாதன் என்பவருக்கு சொந்தமான தென்னந்தோப்பு உள்ளது. இந்த தோட்டத்தில் 5 மயில்கள் ஆங்காங்கே மர்மமான முறையில் இறந்து கிடந்தது. இதுபற்றி தகவல் கிடைத்ததும் கிராம நிர்வாக அலுவலர் கோபி நேரில் சென்று பார்வையிட்டார். இந்த மயில்கள் இறந்து 2, 3 நாட்கள் இருக்கும் என்று தெரிகிறது.

இந்த மயில்கள் வேறு எங்கேயாவது இருக்கும்போது அதற்கு யாராவது வி‌ஷம் வைத்தார்களா? வி‌ஷம் கலந்த உணவை அந்த மயில்கள் தின்று தென்னந்தோப்புக்குள் வரும் போது ஆங்காங்கே இறந்துள்ளதா? என்பது குறித்து தெரியவில்லை. சம்பவ இடத்திற்கு வனத்துறையினர் வந்து பார்வையிட்டு இறந்த மயில்கள் உடலை கைப்பற்றினர். இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சில மயில்களை நாய்கள் கடித்து குதறி இருந்தது.
Tags:    

Similar News