செய்திகள்

கடையநல்லூரில் இளம்பெண் தற்கொலை

Published On 2018-09-02 15:14 GMT   |   Update On 2018-09-02 15:14 GMT
கடையநல்லூரில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். அவர் எதற்காக தற்கொலை செய்தார் என்பது குறித்து உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.
கடையநல்லூர்:

நெல்லை மாவட்டம் கடையநல்லூர் போலீஸ் நிலையம் அருகே வசிப்பவர் சிதம்பர ஈஸ்வரன். இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். அவருடைய மனைவி பாக்கியலட்சுமி (வயது 26). இவர்களுக்கு திருமணம் முடிந்து 6 வருடங்கள் ஆகிறது. 2 குழந்தைகள் உள்ளனர். 

சிதம்பர ஈஸ்வரன் சென்னையில் வேலை செய்வதால், பாக்கியலட்சுமி தனது குழந்தைகளோடு மாமனார் பால குருநாதன், மாமியார் கிருஷ்ணம்மாள் ஆகியோருடன் வசித்து வந்தார். 

சம்பவத்தன்று வீட்டில் இருந்த பாக்கியலட்சுமி திடீரென உடலில் மண்எண்ணையை ஊற்றி தீவைத்து கொண்டார். இதில் உடல் கருகிய அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கடையநல்லூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் பாக்கியலட்சுமி பரிதாபமாக இறந்தார். 

பாக்கியலட்சுமி எதற்காக தீக்குளித்து தற்கொலை செய்தார் என்பது தெரியவில்லை. இதுபற்றி பாக்கியலட்சுமியின் தந்தை முனியசாமி கொடுத்த புகாரின் பேரில், கடையநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். புளியங்குடி துணை சூப்பிரண்டு ஜெயகுமார் விசாரணை நடத்தினார். பாக்கியலட்சுமிக்கு திருமணம் முடிந்து 6 ஆண்டுகளே ஆவதால், இதுபற்றி தென்காசி உதவி கலெக்டர் சவுந்தரராஜன் மேல் விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News