செய்திகள்

வாலிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி- கணவன்-மனைவி கைது

Published On 2018-09-02 12:57 GMT   |   Update On 2018-09-02 12:57 GMT
வாலிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி செய்ததாக கணவன்-மனைவியை போலீசார் கைது செய்தனர்.

மதுரை:

மேலூர் கொட்ட நாதம்பட்டி சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 34). இவரிடம் கட்டக்காளைபட்டியைச் சேர்ந்த சரவணன் (42), அவரது மனைவி கங்காதேவி ஆகியோர் ரூ.9 லட்சத்து 80 ஆயிரம் வாங்கி இருந்தனர்.

வெகு நாட்களாகியும் பணத்தை திருப்பிக் கொடுக்க வில்லை. எனவே சீனிவாசன் பணத்தை திருப்பிக்கேட்டபோது சரவணனும், கங்காதேவியும் மறுத்து விட்டனர்.

இது தொடர்பாக சீனிவாசன் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து கோர்ட்டு உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் சங்கீதா வழக்குப்பதிவு செய்து சரவணன், கங்காதேவியை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News