செய்திகள்
திருமங்கலத்தில் சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
திருமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
பேரையூர்:
ஊதிய குழுவால் வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம் வழங்க வேண்டும், சத்துணவு அமைப்பாளருக்கு பிற துறையில் ஏற்படும் காலி பணியிடங்களில் பதவி உயர்வு வழங்க வேண்டும். சத்துணவு மையங்களில் ஏற்பட்ட காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
மதுரை மாவட்டத்தில் ஆட்சியாளர்களின் நடவடிக்கையால் காலிபணியிடங்களை நிரப்பாமல் சத்துணவு ஊழியர்கள் தங்களுடைய சொந்த செலவில் சமையலர்களை கூலிக்கு அமர்த்தும் அவல நிலை உள்ளது. இதனை களைய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஒன்றிய தலைவர் தனபால் தாங்கினார். ஒன்றிய செயலாளர் மணி வண்ணன், அரசு ஊழியர் சங்க தலைவர் ஜெயராமன், வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட துணை தலைவர் அசோக்குமார், மாவட்ட பொருளாளர் சந்தரபாண்டி ஆகியோர் பேசினர். ஒன்றிய பொருளாளர் செலின் பிரமிளா நன்றி கூறினார். #tamilnews
ஊதிய குழுவால் வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம் வழங்க வேண்டும், சத்துணவு அமைப்பாளருக்கு பிற துறையில் ஏற்படும் காலி பணியிடங்களில் பதவி உயர்வு வழங்க வேண்டும். சத்துணவு மையங்களில் ஏற்பட்ட காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
மதுரை மாவட்டத்தில் ஆட்சியாளர்களின் நடவடிக்கையால் காலிபணியிடங்களை நிரப்பாமல் சத்துணவு ஊழியர்கள் தங்களுடைய சொந்த செலவில் சமையலர்களை கூலிக்கு அமர்த்தும் அவல நிலை உள்ளது. இதனை களைய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஒன்றிய தலைவர் தனபால் தாங்கினார். ஒன்றிய செயலாளர் மணி வண்ணன், அரசு ஊழியர் சங்க தலைவர் ஜெயராமன், வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட துணை தலைவர் அசோக்குமார், மாவட்ட பொருளாளர் சந்தரபாண்டி ஆகியோர் பேசினர். ஒன்றிய பொருளாளர் செலின் பிரமிளா நன்றி கூறினார். #tamilnews