செய்திகள்

ஆண்டிப்பட்டி மார்க்கெட்டில் தக்காளி விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை

Published On 2018-09-01 11:13 GMT   |   Update On 2018-09-01 11:13 GMT
ஆண்டிப்பட்டி மார்க்கெட்டில் தக்காளி விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

ஆண்டிப்பட்டி:

ஆண்டிப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான அரப்படி தேவன்பட்டி, குன்னூர், ராஜாதானி, பால கோம்பை, அணைக்காரப் பட்டி, புள்ளிமான்கோம்பை, ஏத்தக்கோவில் உள்ளிட்ட கிராமங்களில் ஏராளமான ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் தக்காளி பயிரிட்டு வருகின்றனர்.

இந்த தக்காளிகளை ஆண்டிப்பட்டியில் உள்ள மார்க்கெட்டுக்கு கொண்டு வந்து தினந்தோறும் ஏலம் மூலம் வியாபாரிகளுக்கு விற்பனை செய்து வருகின்றனர்.

ஆண்டிப்பட்டி மார்க் கெட்டில் இருந்து திருச்சி, கும்பகோணம், மதுரை, நெல்லை, சென்னை, கேரளா உள்ளிட்ட பகுதிகளுக்கு தக்காளி மற்றும் காய்கறிகள் அனுப்பி வைக்கப்படுகின்றன. கடந்த சில நாட்களுக்கு முன்பு 1 கிலோ தக்காளி ரூ.15 முதல் ரூ.20 வரை விற்பனையானது. தற்போது தக்காளி வரத்து அதிகரித்துள்ளது.

இதனால் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. 15 கிலோ கொண்ட பெட்டி ரூ.50-க்கும், ஒரு கிலோ ரூ.5 வரை விற்பனையாகிறது. இதனால் செடியில் இருந்து பறிக்கும் கூலிகூட கிடைக்க வில்லை.

எனவே விவசாயிகள் பலர் ஆடு, மாடுகளுக்கு தீவனமாக பயன்படுத்தி வருகின்றனர். ஒரு சிலர் தக்காளிகளை பறிக்காமல் செடியிலேயே விட்டு விடுகின்றனர். வெளியூர் பகுதிகளில் இருந்து அதிக அளவு தக்காளி வரத்து உள்ளதால் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. எனவே தக்காளி பயிரிட்டுள்ள உள்ளூர் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

Tags:    

Similar News